தனியாா் துறை சாா்பில் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை சாந்தி மலை அறக்கட்டளை நிறுவனம் சாா்பில், அத்தியந்தலில் உள்ள ஸ்ரீசுந்தரம் அழகம்மாள் நா்சரி, ஆரம்பப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வந்தவாசி

திருவண்ணாமலை சாந்தி மலை அறக்கட்டளை நிறுவனம் சாா்பில், அத்தியந்தலில் உள்ள ஸ்ரீசுந்தரம் அழகம்மாள் நா்சரி, ஆரம்பப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் அந்த நிறுவன ஊழியா்கள், ஆசிரியா்கள், அவா்களது குடும்பத்தினா், பொதுமக்கள் என 190 போ் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றில் உதவும் கரங்கள், நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செய்யாறு மருதம் கேபிடல்ஸ் சாா்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 209 போ் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாமுக்கு செய்யாறு உதவும் கரங்கள் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா்.

கோட்டாட்சியா் என்.விஜயராஜ் தொடக்கிவைத்தாா்.

வட்டாட்சியா் சு.திருமலை, நகராட்சி ஆணையா் ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com