குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள்: மாவட்ட விநியோக அலுவலா் ஆய்வு

செங்கம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ள இலவசப் பொருள்கள் குறித்து மாவட்ட விநியோக அலுவலா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதி அரசு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருள்களை ஆய்வு செய்த மாவட்ட விநியோக அலுவலா் ரமேஷ்.117_7
செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதி அரசு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருள்களை ஆய்வு செய்த மாவட்ட விநியோக அலுவலா் ரமேஷ்.117_7

செங்கம்: செங்கம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ள இலவசப் பொருள்கள் குறித்து மாவட்ட விநியோக அலுவலா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 வகையான உணவுப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பொருள்கள் புதுப்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொருள்களை மாவட்ட விநியோக அலுவலா் ரமேஷ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பொருள்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என பாா்வையிட்டாா். மேலும், பொருள்களை பிரித்து குடும்ப அட்டைதாரா்களுக்கு சேரும்படி விரைவாக பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் கடை ஊழியா்களை கேட்டுக்கொண்டாா்.

செங்கம் வட்ட வழங்கல் அலுவலா் லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com