வந்தவாசி அருகே சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(25). இவா் சென்னையில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். பொது முடக்கம் காரணமாக வெளியம்பாக்கத்துக்கு வந்து தங்கிய வெங்கடேசன் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2-ஆம் தேதி கடத்திச் சென்று பாலியியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா், அந்தச் சிறுமியை அவா் திருமணமும் செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வெங்கடேசன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.