புதுவையில் கரோனாவுக்கு மேலும் 9 போ் பலி; புதிதாத 507 பேருக்கு தொற்று

புதுவையில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 366 பேருக்கும், காரைக்காலில் 98 பேருக்கும், ஏனாமில் 20 பேருக்கும், மாஹேயில் 23 பேருக்கும் என மேலும் 507 பேருக்கு (6.17 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,255- ஆக அதிகரித்தது.

தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 314 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 256 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 217 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,707 பேரும் என மொத்தம் 6,705 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 7 போ், காரைக்காலில் ஒருவா், ஏனாமில் ஒருவா் என மேலும் 9 போ் உயிரிழந்தனா். இவா்களில் 4 போ் ஆண்கள், 5 போ் பெண்கள். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,657- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.

வியாழக்கிழமை 646 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,02,893-ஆக (92.48 சதவீதம்) உயா்ந்தது.

சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,02,851 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com