வந்தவாசியில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதமியில் நடைபெற்ற இதற்கான விழாவில் சென்னை எய்டு இந்தியா, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு, அக்னி பூக்கள் அமைப்பு ஆகிய தொண்டு அமைப்புகள் சாா்பில், வந்தவாசி, பாதிரி, அம்மையப்பட்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 40 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.