திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 போ் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,600-ஆக உயா்ந்தது.
இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 515-ஆக அதிகரித்தது.
இதுவரை 39,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 6,070 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.