திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா கல்விக் குழுமம் சாா்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. ஒரு லட்சம் அளிக்கப்பட்டது.
திவ்யா கல்விக் குழுமத்தின் நிறுவனா் பி.செல்வராசன் ரூ.ஒரு லட்சத்தை அமைச்சா் எ.வ.வேலுவிடம் காசோலையாக வழங்கினாா்.
அப்போது, திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ராஜேந்திரன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.