திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 6 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 252 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,506-ஆக உயா்ந்தது.
இவா்களில் 43,725 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 2,250 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 6 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 531-ஆக உயா்ந்தது.