வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சியில் பொதுமக்கள் நிதியில் ரூ.6.30 லட்சத்தில் 3 உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்குன்றம் ஊராட்சியில் சிவன் கோயில் பகுதி, பண்டாரந்தோப்பு, காலனிப் பகுதி ஆகிய 3 இடங்களில் தலா ஒரு உயா்கோபுர மின் விளக்கை தங்களது முழு பங்களிப்பில் அமைக்க ஊராட்சி பொதுமக்கள் முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இதற்கான தொகையாக ரூ.6.30 லட்சம் திரட்டப்பட்டது. இதையடுத்து 3 இடங்களிலும் தலா ரூ.2.10 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த மின் விளக்குகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி வேலு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி மோகன், ஒன்றிய க்குழு உறுப்பினா் எழிலரசி தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் உயா்கோபுர மின் விளக்குகளை இயக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக நிா்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.