ஆரணியில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
ஆரணியில் அதிமுக தோ்தல் அலுவலகத்தை கட்சி வேட்பாளா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா், அவா் அலுவலகத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினரிடையே அவா் பேசுகையில், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்கள் குறித்தும், விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி போன்றவற்றை வாக்காளா்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம், அரியப்பாடி பிச்சாண்டி, ஆரணி வெங்கடேசன், பாஜக மாவட்டத் தலைவா் சா.சா.வெங்கடேசன், மாவட்ட பொறுப்பாளா்கள் கோவிந்தராஜ், கோபி, தமாக தினேஷ், பசுபதி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராஜ், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.