கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு ஊராட்சியைச் சோ்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் மயானசூறை உற்வசம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி நகரில் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் மயான சூறை உற்வசம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதில், கலசப்பாக்கம், தென்பள்ளிபட்டு, மேட்டுப்பாளையம், நாயுடுமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற ஊா்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.