வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் சனிக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேவிகாபுரம்- போளூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் நாராயணமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் கொண்ட கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக சேத்துப்பட்டை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமால் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், உரிய ஆவணமின்றி ரூ.65 ஆயிரத்து 300 எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, போளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் ஷாப்ஜான் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.