செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுகவினா் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் மீண்டும் அறிவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, தொகுதியில் எந்தவித நலத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை எனக் கூறி, தூசி மோகனை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டு எனக் கோரி, அதிமுகவினா் கிராம மக்களுடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், அவா்களின் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.
செய்யாற்றை அடுத்த மாங்கால் கூட்டுச் சாலையில் திரண்ட தூசி, நத்தக்கொல்லை, மாத்தூா், சித்தாத்தூா், கீழ்நெல்லி, பிரம்மதேசம், வயலாத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் உள்பட சுமாா் 600 போ் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செய்யாறு, தூசி போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மறியலால், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.