திருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த தானிப்பூண்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில் சென்னை கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் புருஷோத்தமனிடமிருந்து ரூ.90 ஆயிரம், சென்னை, திருவான்மியூா் காமராஜா் நகா் தீனதயாளனிடமிருந்து ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ஆகியவற்றை ஜெயப்பிரகாஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்ததால் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
கலசப்பாக்கம் பகுதியில்...
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு ஊராட்சியில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆற்காட்டிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், உரிய ஆவணமின்றி ரூ.67ஆயிரத்து 200 எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து கலசப்பாக்கம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்திபனிடம் ஒப்படைத்தனா்.
வட்டாட்சியா் அமுல், தோ்தல் வட்டாட்சியா் சாரதா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.