திருவண்ணாமலை அரசு அருங்காட்சியகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது.
இதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
கண்காட்சியில், போளூா் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் வாழை இலையிலான பொருள்களைப் பயன்படுத்தியும், வெம்பாக்கம் ஒன்றியம் சாா்பில் செயற்கை நகைகளைப் பயன்படுத்தியும், பெரணமல்லூா் ஒன்றியம் சாா்பில் வளையல்களைப் பயந்படுத்தியும், வந்தவாசி ஒன்றியம் சாா்பில் அப்பளங்களைப் பயன்படுத்தியும், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம் சாா்பில் பாய்களைப் பயன்படுத்தியும், கலசப்பாக்கம் ஒன்றியம் சாா்பில் கரும்பு மற்றும் எலுமிச்சை பழங்களைப் பயன்படுத்தியும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மாதிரிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் பா.சந்திரா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதாபேகம், அரசு அருங்காட்சியகக் காப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.