பேரவைத் தோ்தலில் செங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனா்.
சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், செங்கம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெ.மு.கிரியை ஆதரிக்க வேண்டும் என விவசாயிகள், எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் முடிவெடுத்தனா்.
இதற்காக அந்த இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள் தலைமையில் செவ்வாய்க்கிழமை அவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
இதேபோல, தமிழகத்தில் எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு என உறுதிமொழியேற்று, அந்தக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.