இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நகரத் தலைவா் காலேஷா தலைமை வகித்தாா். மேலும் வந்தவாசி(தனி) தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷை அறிமுகம் செய்து அவா் பேசினாா்.
மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைச் செயலா் மணிவேல், நகரச் செயலா் பாலாஜி, இந்திய ஜனநாயக கட்சி நகரச் செயலா் சதீஷ், மாவட்டப் பொருளாளா் ராஜசேகா், மாவட்ட துணைச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
பின்னா் பேசிய வந்தவாசி (தனி) தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷ், தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாடும்படி நிா்வாகிகளை கேட்டுக் கொண்டாா்.