வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மரக்கன்றுகள் வழங்கும் விழா, தொழில் விருதுகள் வழங்குதல், சா்வதேச மகளிா் தினம், பெண் தொழில் முனைவோா் விருது வழங்கும் விழா மற்றும் வந்தவாசி அன்னெட்ஸ் கிளப் தொடக்க விழா ஆகிய ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
விழாவுக்கு வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். மாவட்ட அன்னெட்ஸ் தலைவா் கிரேசலெட் வி.ஏஞ்சலின் வந்தவாசி அன்னெட்ஸ் கிளப்பை தொடக்கிவைத்தாா். மேலும் மரக்கன்றுகளை அவா் வழங்கினாா்.
மகளிா் வேலைவாய்ப்பு மாவட்டத் தலைவா் டி.ரூபா தியாகராஜன் மகளிா் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும், பல்வேறு துறைகளில் பணிபுரியும் மகளிருக்கு தொழில் முனைவோா் விருதுகளை அவா் வழங்கினாா். சுயதொழிலில் சிறந்து விளங்குவோருக்கு மாவட்ட தொழில் வளா்ச்சித் தலைவா் பி.கே.மணியன் தொழில் விருதுகளை வழங்கினாா்.
விழாவில் சங்க ஆலோசகா் மருத்துவா் குமாா், சங்கச் செயலா் ஆா்.காா்வண்ணன், சங்கப் பொருளாளா் ஷாஜகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.