செங்கம்: செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செங்கம் நகரம் ராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரியாா்நகா், பஜாா் வீதி ஆகிய பகுதிகளில் நைனாக்கண்ணு வீடு மற்றும் கடைகளில் வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவு கோரினாா்.
தொடா்ந்து, கிருஷ்ணாவரம் பகுதிக்குச் சென்றபோது விவசாய நிலத்தில் மணிலாவில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் சென்று அவா்களுடன் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, தானும் ஒரு விவசாயி; எனவே தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.