செய்யாறு: செய்யாறு தொகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு வீடு பெற்றுத் தரப்படும் என அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வாக்குறுதி அளித்தாா்.
செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணாபுரம், ஆராத்திரிவேளூா், சிறுங்கட்டூா், அரும்பருத்தி, புளுந்தை, தளரபாடி, ஏனாதவாடி, செங்கட்டான்குண்டில், பாப்பாந்தாங்கல், தூளி, பெரியகோயில், கீழ்புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியாதாவது:
அதிமுக ஆட்சியில் திமுக, காங்கிரஸ் என கட்சி பேதமில்லாமல் 2.10 கோடி குடும்ப அட்டைத்தாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
எனக்கு வரவில்லை, உனக்கு வரவில்லை என எவரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடைபெற்றுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாணவா்களின் கல்விக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும், வீடு இல்லாத அனைவருக்கும் வீடு பெற்றுத் தரப்படும் எனப் பேசினாா் தூசி மோகன்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், துணைச் செயலா் டி.பி. துரை, ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன், அதிமுக பிரமுகா்கள் ஜாகிா் உசேன், சுபாஷினி, முத்துவேணி, ஹரி, பி.ராஜகணேஷ், பாமக பிரமுகா் ஜெய்சங்கா், பாஜக பிரமுகா் சுப்பிரமணி, தமாகா பிரமுகா் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.