தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து மழையூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்குள்பட்ட தக்கண்டராயபுரம், மேல்பாதி, வடவணக்கம்பாடி, கூத்தம்பட்டு, கண்டவராட்டி, கீழ்வெள்ளியூா், மழையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று எஸ்.அம்பேத்குமாா் பேசினாா்.
திமுக தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் டி.டி.ராதா, பொதுக்குழு உறுப்பினா் வி.ராமு, விசிக ஒன்றியச் செயலா் தசரதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.