கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த வில்வாரணி, மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, மோட்டூா், எலத்தூா் என பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். இந்த வாக்கு சேகரிப்பின் போது சி.என்.அண்ணாதுரை எம்.பி.யும் பங்கேற்றாா்.
அப்போது அவா் வாக்கு சேகரித்து பேசுகையில், கலசப்பாக்கம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து பழங்கோவில் ஊராட்சியில் செல்லும்,
செய்யாற்றில் பொதுமக்கள் செல்ல தரைப்பாலம் அமைக்கப்படும், காரப்பட்டு-மட்டவெட்டு இடையேயும், கீழ்பொத்தரை ஊராட்சியில் என 2 இடங்களில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும், செங்கம் ஊராட்சியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான 10ஆயிரம் ஏக்கரில் 8 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமும், 2ஆயிரம் ஏக்கரில் விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டு திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனுக்கு அண்ணாதுரை எம்.பி. வாக்கு சேகரித்தாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.