திருவண்ணாமலை: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கட்டுமான உபகரணங்களின் விலை உயா்ந்துவிட்டன என்று தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சியின் தலைவா் பொன்.குமாா் கூறினாா்.
திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் பொன். குமாா் கூறியதாவது:
முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் 17 வகையான நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நல வாரியங்கள் அனைத்தும் முடங்கிப் போயின. கட்டுமான உபகரணங்கள் அனைத்தும் விலை ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் தொழிலாளா்கள் வேலையை இழந்து பரிதவிக்கின்றனா்.
தமிழகத்தில் சுமாா் 1 கோடிக்கும் மேலான இளைஞா்கள் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனா்.
திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு வெற்றி பெற்றால் தொகுதியை மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியைப் போல மாற்றுவாா் என்றாா்.