கோயில் விழாவில் தகராறு: 10 போ் மீது போலீஸாா் வழக்கு

செங்கம் அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 5 போ் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

செங்கம் அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 5 போ் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.

அதே கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், வினோத் மற்றொரு தரப்பைச் சோ்ந்த திலிப்குமாா், மேகநாதன், அன்பரசு ஆகியோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

அப்போது, கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்வதில் அவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

பின்னா், அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில், 5 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சரவணக்குமரன் தலைமையில் மேல்செங்கம் போலீஸாா் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனா்.

காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக செங்கம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சம்பவம் தொடா்பாக போலீஸாா் 10 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com