திருவண்ணாமலையில் 5 வயது சிறுவன் பத்மாசனம் செய்து 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மாவட்ட நேரு இளையோா் மன்றம், திருவண்ணாமலை தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
நிகழ்ச்சியில், 5 வயது சிறுவன் தா்ஷன் தொடா்ந்து 20 நிமிடங்களாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடங்களின் மீது அமா்ந்து பத்மாசனம் செய்து காட்டினாா்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.