வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சி.காருண்யா தலைமையிலான குழுவினா் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் வல்லம் கூட்டுச் சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், ஒரு காரில் எறும்பூரைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 430-ஐ எடுத்துச் செல்வதும், மற்றொரு காரில் சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 640-ஐ எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடமிருந்தும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் அகத்தீஸ்வரனிடம் பணத்தை ஒப்படைத்தனா்.