செய்யாறு அருகே சிறு பாலத்தில் தூங்கியவா் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், கீழ்நேத்தப்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி(32), கூலித் தொழிலாளி. திருமணமாகாத நிலையில், இவா் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த ஏப்.26-ஆம் தேதி இரவு அவா் வசிக்கும் தெருவில் உள்ள சிறு பாலத்தின் மீது படுத்துத் தூங்கினாா்.
அப்போது தூக்கத்தில் தவறி கீழே விழுந்ததில் இவருக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.