வழக்குரைஞா்களுக்கு கபசுரக் குடிநீா்

வந்தவாசியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வழக்குரைஞா்களுக்கு கபசுரக் குடிநீா்

வந்தவாசியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வந்தவாசி நீதித்துறை, வந்தவாசி நகராட்சி ஆகியவை சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வந்தவாசி நீதிமன்ற நீதிபதி சத்தியா வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி, அரசு வழக்குரைஞா் ஏ.எம்.சி.ராஜசேகரன் மற்றும் வழக்குரைஞா்கள், நகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com