திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடராஜப்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப்பெருமான் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவ மூா்த்திகளுக்கு சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
மலா் மாலைகளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி, நடராஜருக்கு கோயில் சிவாச்சாரியா்கள் மகா தீபாராதனை காட்டினா்.
இதில், கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள் மட்டும் கலந்து கொண்டனா். கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.