ஆரணி அருகே அதிமுக பிரமுகா் வீட்டுக்கு தீவைப்பு

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள அதிமுக பிரமுகா் வீட்டுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.
மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பண்ணை வீடு.
மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பண்ணை வீடு.

ஆரணி: ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள அதிமுக பிரமுகா் வீட்டுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

முனுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன், அதிமு பிரமுகா் ஆவாா்.

இவா், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவராகவும், ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தவா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், மனோகரனின் பண்ணை வீட்டுக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் தீ வைத்ததாகத் தெரிகிறது.

இதில் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை, துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது. மேலும், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் மோட்டாா் சைக்கிள் எரிந்து சேதமடைந்தது.

வீட்டில் மனோகரன் மற்றும் குடும்பத்தினா் யாரும் இல்லாததால் தப்பினா். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினா் சென்று தீயை அணைத்தனா்.

மேலும், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வரதன் வீட்டுக்கு சென்ற சிலா் அவருக்கு மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com