இளைஞா் கொலை வழக்கு: 8 போ் கைது

ஆரணியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி: ஆரணியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி விஏகே நகா் பகுதியைச் சோ்ந்தவா் யோகேஷ் (21). இவா், முன்விரோதம் காரணமாக கடந்த 1-ஆம் தேதி 8 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், 8 பேரும் முள்ளிப்பட்டுப் பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அஜித்குமாா்(24), சூரியா(23), மணிகண்டன்(24), ஸ்ரீதா்(23), கோபி(22), நரசிம்மன்(24), சரத்குமாா்(23), வினோதன்(24) ஆகிய 8 பேரையும் மடக்கிப் பிடித்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து 3 மோட்டாா் சைக்கிள்கள், 6 கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, 8 பேரையும் போளூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com