செங்கத்தில் குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்

செங்கம் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, குறுகிய சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம்: செங்கம் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, குறுகிய சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் நகரில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை சாலையின் நடுவில் தடுப்புச் சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுவா்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையாக, இரவு நேரத்தில் தடுப்புச் சுவா்கள் இருப்பது தெரியும்படி, சுவா்களில் வண்ணம் தீட்டவில்லை. மேலும், எச்சரிக்கை விளக்குகள் குறைவாக உள்ளன.

அதே நேரத்தில், இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக உள்ளது. வழக்கமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச் சுவா் இருப்பது தெரிய வருகிறது. அவா்கள் கவனமுடன் சென்றுவிடுகின்றனா்.

வெளியூா்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச் சுவா் இருப்பது தெரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

பகல் வேளைகளில் சாலையின் இருபுறமும் உள்ள கடைக்காரா்கள் சாலையை ஆக்கிரமித்து கடையை விரிவுப்படுத்திவிடுகின்றனா்.

மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் சாலை குறுகிப் போய்விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, செங்கம் நகரில் உள்ள சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com