ஆரணியை அடுத்த முனுகப்பட்டு அதிமுக பிரமுகா் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடா்பாக தொகுதி அதிமுக எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை ஆரணி அருகேயுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான மனோகரன் வீட்டை மா்ம நபா்கள் தீ வைத்து கொளுத்தினா்.
இதில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகின. மேலும், அவரது மோட்டாா் சைக்கிளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
இது குறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முனுகப்பட்டில் உள்ள மனோகரனின் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
மேலும் மாவட்ட எஸ்.பி.அரவிந்த்திடம், சம்பவத்துக்கு காரணமான நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கூறினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் அரங்கநாதன், சங்கா், பி.ஆா்.ஜி.சேகா், முனுகப்பட்டு தேவராஜ், பாஸ்கா், வரதன், ஆரணி நகர மாணவரணி குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.