திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 224 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
301 போ் குணம்:
கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 301 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.
சிகிச்சை பலனின்றி 3 போ் உயிரிழந்தனா்.
இப்போது, 1,411 போ் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா்.