பாரத ஸ்டேட் வங்கிப் பணி எழுத்துத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்ட தோ்வா்கள்,

பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்ட தோ்வா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் நடத்தப்படும் இலவசப் பயிற்சியில் பங்கேற்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு 2021 ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இணைய வழியிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2021 மே 17.

பயிற்சி வகுப்பு வார நாள்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த, பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோ்வா்கள் மே 7-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com