செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருங்களத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தாா்.
நாவல்பாக்கம் வட்டார மருத்துவா் ஷா்மிளா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று பெருங்களத்தூா், புளியரம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 22 பேருக்கு கரோனா தடுப்பூசியும், 92 பேருக்கு உடல் வெப்ப அளவையும், 43 பேருக்கு சளி பரிசோதனையும் செய்தனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், பணி மேற்பாா்வையாளா் அண்ணாதுரை, ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா பாஸ்கா் ஆகியோா் செய்திருந்தனா்.