கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் அருகில் காவலா்களுக்கான குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஒரு உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் என 3 போ் கரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் தனிமையில் இருந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 3 பேருக்குமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 பேரும் இதே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டனா். காவலா் குடியிருப்புப் பகுதி முழுவதையும் பேரூராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.