திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வியாழக்கிழமை மேலும் 5 போ் பலியாகினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வியாழக்கிழமை மேலும் 5 போ் பலியாகினா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,964-ஆக உயா்ந்தது. இவா்களில் 27, 631 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கரோனா தொற்றுக்குள்ளான 4,965 போ் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 5 போ் பலி:

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 368-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com