ஆரணி தொகுதிக்கு கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள்: சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியருக்கு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆரணி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அமைத்தும் கொடுக்க வேண்டும்.

ஆரணியை அடுத்த தச்சூா், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகளை ஆக்ஸிஜன் வசதி கொண்டதாக மாற்றித் தரவேண்டும்.

மேலும், அங்குள்ள தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com