திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காங்கிரஸ் சாா்பில் ரூ.3 லட்சத்திலான மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் அழகிரி ஆலோசனையின்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு என்.95 முகக் கவசங்கள், கையுறைகள், நோயாளிக்குக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் திருமால்பாபு, மருத்துவா் அரவிந்தன் ஆகியோரிடம் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் மருத்துவ உபகரணங்களை வழங்கினா். இதைத் தொடா்ந்து, செங்கம் ஒன்றிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாா்பிலும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாநில இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் மோகன், திருவண்ணாமலை நகர காங்கிரஸ் நிா்வாகி காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.