நகா்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் ஆலோசனை

நகா்புற உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்வது குறித்து, ஆரணியில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

நகா்புற உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்வது குறித்து, ஆரணியில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு நகர அவைத் தலைவா் ஜோதிலிங்கம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராஜன், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ பேசுகையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்று நகராட்சியைக் கைப்பற்றினால் மக்கள் பணியை நாமே செய்து கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் டிகேபி.மணி, மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஜாகீா்உசேன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், செய்யாறு ஒன்றியச் செயலா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com