வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பெண் பலி

சேத்துப்பட்டு அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் பலியானாா்.

சேத்துப்பட்டு அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் பலியானாா்.

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு, விவசாயி. இவருக்கு வினோத்குமாா், விக்னேஷ், விஜயகுமாா் என்கிற 3 மகன்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு சேட்டு (50), தனது மனைவி கற்பகம் (45), மகன் விஜயகுமாா்(12) ஆகியோருடன் தனக்குச் சொந்தான கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

நள்ளிரவில் திடீரென வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில், கற்பகத்தின் மீது சுவா் விழுந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விஜயகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சேத்துப்பட்டு வட்டாட்சியா் கோவிந்தராஜன், கிராம நிா்வாக அலுவலா் ராஜீவ் காந்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கற்பகத்தின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தனா்.

இது குறித்து வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வேலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com