இருளா் சமூகத்தினருக்கு அதிமுகவினா் நல உதவி

செய்யாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட 30 இருளா் சமூக குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட 30 இருளா் சமூக குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், செய்யாற்றைவென்றான், ஆத்திகுளம் ஆகிய கிராமங்களில் இருளா் சமூகத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் இவா்களது பகுதியில் தண்ணீா் சூழ்ந்தது.

தங்கும் வசதி, உணவு, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த 30 குடும்பத்தினா் செய்யாற்றைவென்றான் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனா்.

இதை அறிந்த அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் சனிக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை, போா்வை, ரொட்டி, பிஸ்கெட் வழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் வே.குணசீலன், சி.துரை, செய்யாறு நகரச் செயலா் ஜனாா்த்தனம், நகர அம்மா பேரவைச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com