திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 80 ஆயிரத்து 949 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 1,075 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 57,817 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23,132 பேருக்கும் என மொத்தம் 80,949 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.