திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா் மழையால் வீடுகளை இழந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சா் எ.வ.வேலு தனது சொந்த செலவில் நிதியுதவி, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா்.
மாநில மருத்துவரணி துணைச் செயலா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொகுதி எம்எல்ஏவும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொடா் மழையால் வீடுகளை இழந்த திருவண்ணாமலை நகரம் இரா.குமாா், ஆா்.புஷ்ப லீலா, கே.ராதா, வே.தமிழரசி, நா.கெம்புராஜ், தெ.சேரன்மாதேவி, மு.குப்பு, பி.தமிழ்மணி, செ.சாந்தி, ஏ.சேகா், ஆ.கஸ்தூரி, மு.பஞ்சமணி, க.பூரணி, ந.மங்கை உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.5 ஆயிரம், அரிசி, வேட்டி- சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் த.ரமணன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, கு.ரவி, பொதுக்குழு உறுப்பினா் ப்ரியா ப.விஜயரங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.