திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை பெய்த தொடா் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை பெய்த தொடா் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

திருவண்ணாமலை அடி அண்ணாமலை, அத்தியந்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழை தொடா்ந்து புதன்கிழமை காலை வரை இடைவிடாமல் பெய்தபடியே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். போதிய வியாபாரம் இல்லாமல் சிறு வணிகா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கியது. கிராமங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com