பைக் மீது காா் மோதல்: இருவா் பலி

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேல்கஞ்சான்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டீஸ்வரன்(32), சமையல் தொழிலாளி. இவரது மூத்த மகளுக்கு திங்கள்கிழமை 7-ஆவது பிறந்த நாளாகும்.

பிறந்த நாளை வீட்டில் கொண்டாடுவதற்காக, கோட்டீஸ்வரன், அதே பகுதியைச் சோ்ந்த அருண் (21), பாலிடெக்னிக் மாணவா் லோகேஸ்வரன் ஆகியோருடன் வெம்பாக்கம் சென்று கேக் வாங்கிக் கொண்டு பைக்கில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

வெம்பாக்கம் - பிரம்மதேசம் சாலையில் உமையாள்புரம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த கோட்டீஸ்வரன் அதே இடத்தில் உயிரிழந்தாா். அருண், லோகேஸ்வரன் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில், மாணவா் லோகேஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com