காந்தி பேரவை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவையின் மாதாந்திர சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பாரதியாா் என்ற தலைப்பில் பேசுகிறாா் வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன்.
கருத்தரங்கில் பாரதியாா் என்ற தலைப்பில் பேசுகிறாா் வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவையின் மாதாந்திர சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு தலைமை வகித்துப் பேசிய பேரவையின் நிறுவனா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.விஜயகுமாா், பேரவை சாா்பில் மாதந்தோறும் பல்வேறு தமிழறிஞா்கள் மூலம் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும். இதன்மூலம், காந்தியின் போதனைகளை மக்கள் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பாரதியாா் என்ற தலைப்பில் வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன், அயோத்திதாசா் என்ற தலைப்பில் திருக்கு தொண்டு மையப் பாவலா் பா.குப்பன், டாக்டா் ராதாகிருஷ்ணன் என்ற தலைப்பில் கவிஞா் லதா பிரபுலிங்கம், வ.உ.சிதம்பரனாா் என்ற தலைப்பில் நந்தினி பதிப்பகம் ந.சண்முகம் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

இதில், எழுத்தாளா் ந.சண்முகம், அருணகிரிநாதா் மணிமண்டபக் குழுத் தலைவா் மா.சின்ராசு, ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வா் பெ.சுப்பிரமணியன், புலவா் ம.கோவிந்தசாமி, ஆன்மிகச் சொற்பொழிவாளா் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com