திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள சுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தன்வந்திரி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் சுந்தரவரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றன. மேலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, மக்களுக்கு நோய், நொடிகள் நீங்க வேண்டி, கோயில் வளாகத்தில் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதில், திரளான கிராம மக்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா்.