திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபடியே இருந்தது.
இதில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, ஜமுனாமரத்தூரில் 1, திருவண்ணாமலையில் 3, சேத்துப்பட்டில் 4 மி.மீ. மழை பதிவானது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மதியம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, துரிஞ்சாபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீா் மழை பெய்தது.